Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக நகர அலுவலகத்திலிருந்து நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் மகாமகக் குளம் அருகே நிறைவடைந்தது.
அங்குள்ள பேரறிஞர் அண்ணாவின் முழு திருவுருவச் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் நகரச் செயலாளர் சுப.தமிழழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். அப்போது இந்தி திணிப்பை எதிர்ப்போம் தமிழை காப்போம் என அவர்கள் முழக்கமிட்டனர்.